அனைத்துலக ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்-தமிழ்.
எம் தமிழ் உறவுகளே வணக்கம். எமது ஒலிபரப்பின் மறுசீரமைப்புப் பணிகள், கலையக இடமாற்றம் என்பன ஒரே நேரத்தில் மேற்கொள்ளப் பட்டதினால் ஒலிபரப்பைக் கேட்பதில் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுவிட்டன. அதற்காக மன்னிப்புக்கோருகின்றோம்.... மேலும்
அனைத்துலக ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்-தமிழ்.
வவுனியா முகாம்களில் 20,000 பேர் தமது அங்கங்களை இழந்து, மாற்று வலுவுள்ளோராக இருப்பதாக, பிரித்தானிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களில் பலர் மன நோய்க்கு ஆளாகி இருப்பதாக, கரித்தாஸ் கத்தோலிக்க மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்த தமிழ் மக்களை வவுனியா தடுப்பு முகாம்களில் நீண்ட காலம் முடக்கி வைக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
வவுனியா தடுப்பு முகாம்களிலுள்ள மக்களை அச்சுறுத்தி வாக்களிக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
லண்டனில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில் மக்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளாலும், பெடுபிடிகளால் ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக மேஜர் தர அதிகாரிகள் இருவர் உட்பட படைப் புலனாய்வு அதிகாரிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறீலங்கா கடற் படையினரால் கைது செய்யப்பட்டிருந்த தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் 9 பேரும் இன்று விடுதலை செய்யபட்டுள்ளனர்.
ஈரானில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர் 12 பேரையும் விடுவிப்பதற்கான நடவடிக்;கை எடுக்கப்பட்டு வருவதாக, சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது.
ஏனைய செய்திகள்
வன்னியின் மனிதப்பேரவலமும் சிறீலங்காவை நோக்கி திரும்பும் உலகின் கவனமும் - வேல்ஸ் இல் இருந்து அருஷ்
இந்த மாதத்தின் முதல் வாரத்தின்; இறுதி பகுதியான வெள்ளிக்கிழமை (8) 58 ஆவது மற்றும் 53 ஆவது படையணிகள் இணைந்து வன்னி களமுனையில் ஒரு முன்நகர்வை மேற்கொண்டிருந்தன. கரையாமுள்ளிவாய்க்கால் பகுதியை கைப்பற்றுவதே அவர்களின் நோக்கம். இந்த அணிகளின்... மேலும்
தமிழர் படுகொலை வரலாறு
இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசு தலைமையில் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு வரலாறு நீண்டது. பல வடிவங்களில் முன்னெடுக்கப்படும் இந்த இன அழிப்பில் முதன்மையான வடிவமாக இருந்து வருவது நேரடியான படுகொலைகளாகும்.... மேலும்

மதியச்செய்திகள் 10-06-2009








